சென்னை, நவ. 29: முல்லைப் பெரியாறு பிரச்னையில் நிலைமையை மோசமாக்கி வரும் கேரளத்துக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லி, நவ.30: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை வரும் டிசம்பர் 2ம் தேதி சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாருய்யா! அங்கன, ஒரு பிரச்சினைன்னதும் எங்க போகணுமோ அங்க நேர்ல போறாங்க. நம்ம மாநிலத்துல கேரள அரசுக்கு அறிவுரை சொல்லுன்னு கெஞ்சி கடுதாசி போடுறாங்க பிரதமருக்கு. லட்சக்கணக்குல சொந்த இனம் அழிக்கப்பட்ட போதே கடுதாசி எழுதி, தந்தி அடித்து தமிழனைக் காக்கத் துடித்த இனமில்ல நாமெல்லாம்?
உலமாக்கள், பள்ளி வாசல்களில் பணிபுரியும் இமாம்கள், மோதினார்கள், தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்கள், மதரஸôவில் பணிபுரியும் அரபி ஆசிரியர்கள் என 11,457 நபர்களுக்கு ரூ. 3 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 632 செலவில் சைக்கிள்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுபான்மையினர் என்ற சாக்கில் வாக்குக்காக இதையெல்லாம் இஷ்டத்திற்கு செய்பவர்கள், வீதிகளில் பூசாரிகளையும், அர்ச்சகர்களையும் போராட்டம் நடத்த வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். ஏனென்றால் இவர்களுக்கு வாக்கு வங்கியாகத் தெரிவது முஸ்லீம்களும் கிறித்துவர்களும் மட்டுமே, வெல்வது இந்து வாக்குகளில் தான். எல்லா கட்சியும் நக்குறது இங்க, வாலாட்டுறது அங்க.
புது தில்லி, நவ. 29: சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் வரை நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவைத் திரும்பப் பெற முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.
நாட்டை யாருக்காவது மொத்தமா வித்து தொலைங்கய்யா. சும்மா ஒவ்வொண்ணுலயா 51 விழுக்காடு, 36 விழுக்காடுன்னு பிரிச்சி விக்கறதுக்கு பதிலா ஒரேயடியா வித்து தலை முழுகிடுங்க. சனியன் விட்டதுன்னு நாங்க நிம்மதியா இருப்போம்.
No comments:
Post a Comment