Thursday, 15 December 2011

நவம்பர் 18, 2011

மல்லாக்க படுத்து வாந்தி எடுக்கும் கருணாநிதி!

ஒரு விசயத்தை எழுதியவனை விமர்சிக்கும் போது பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச அடிப்படை நாகரீகத்தை கூட கடைப்பிடிக்கும் சுய கட்டுப்பாடு இல்லாத ஒரு மனிதர் கருணாநிதி. இது குறித்து எத்தனையோ கேள்விகளை நாம் எழுப்பலாம். கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், பெண்கள் உட்பட யாரை வேண்டுமானாலும் சில எழுத்துகளில் சந்திக்கு இழுத்து விட முடியும். கருணாநிதி குடும்பத்துப் பெண்கள் யார் பெயரையாவது குறிப்பிட்டு ‘அவர் பத்தினி என்றால்… இதை நிரூபிக்கட்டும்’ என்று அவர் போலவே சவால் விடுக்க எவ்வளவு நேரமாகும்?
காஞ்சிபுரம், நவ. 16: நிலப் பறிப்புப் புகார் தொடர்பாக ராமநாதபுரம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் (எ) சிவக்குமார் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
பாத்துங்க, டெரர் கிங் ரிதீஷை மறந்தும் வெளில உட்டுறாதீங்க. திரும்ப நடிக்க வந்துட்டா, மக்கள் பாடு திண்டாட்டமாயிடும்.
சென்னை, நவ.17: மத்திய அரசிடமிருந்து போதிய நிதி உதவி கிடைக்காததால் பஸ், பால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அடக் கொடுமையே! மத்திய அரசு கிட்ட இருந்து நிதி வரும்னு சொல்லியா வாக்கு கேட்டீங்க? அப்டின்னா, காங்கிரசுக்கே வாக்களிச்சிருப்போமே! ஏன் இந்த அரசியல்வியாதிங்க எல்லாருமே, ஆட்சிக்கு வர்ற வரைக்கும் ஒரு மாதிரியும், வந்த பின்னாடி வியாபாரிங்க மாதிரியும் நடந்துக்கிறாங்க?
இது பச்சை அயோக்கியத்தனம். கருணாநிதி ஆட்சியில பேருந்து கட்டணத்தை உயர்த்துறாரு, மின் கட்டணத்தை உயர்த்துறாருன்னு, கூவிக்கினே இருந்த இந்தம்மா, இப்போ ஏதோ ஒரு சாக்கை வச்சி அதையே திரும்ப செய்தா, அதுமாதிரி ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. சென்னை தவிர ஆவின் பால் எங்கு வாங்கினாலும் (அரை லிட்டர்) உறை மேல் போட்டிருப்பதற்கு மேல் ஒன்று முதல் மூன்று ரூபாய் வரை அதிகம் தந்தால் தான் கிடைக்கும். அதாவது லிட்டருக்கு ஆறு ரூபாய் இப்போதே அதிகம் விற்கப்படுகிறது. இனி மேலும் ஆறு ரூபாய் ஏற்றி, அதற்கு மேல் கடைக்காரர்களுக்கு லிட்டருக்கு ஏழெட்டு ரூபாய் கப்பம் கட்டினால் தான் வீட்டில் தேனீர் குடிக்க முடியும்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் ஜெயலலிதாவின் போக்கின் உண்மை நிலை வெளி வந்து கொண்டிருக்கிறது. நூலக இட மாற்ற அறிவிப்பு, விலை உயர்வுகள் என்று வரிசையாக.
இன்னொரு சந்தேகம், ஈழப்போரின் போது தேர்தல் வாக்குறுதியா ஒண்ணு சொன்னீங்களே! நினைவிருக்கா? ‘ஈழத்திற்கு ராணுவத்தை அனுப்பி தனியீழம் அமைப்பேன்’னு வாய் கூசாம வாக்கு குடுத்தீங்களே? ஜெயிச்சிருந்தா, ‘மத்திய அரசு ராணுவத்தை அனுப்ப மறுப்பதால், ஈழத்தமிழர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, அவர்களுக்கு என் அஞ்சலிகள்’னு சொல்லியிருப்பீங்களோ? கண்டிப்பா சொல்ற ஆளு தான் நீங்க, ஏன்னா நீங்க எப்பேர்ப்பட்ட கருணாநிதியவே எதிர்த்து அரசியல் பண்ற அரசியல்வியாதி ஆச்சே!
குரங்கு வந்தாலும் சரி தேவாங்கு வந்தாலும் சரி அழகு ஒரே மாதிரி தான் இருக்கிறது.
புவனேஸ்வர், நவ.17: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவரது இல்லத்தில் புல்தரையின் மீது நடக்கும்போது கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவரது வலது காலில் உள்ள தசைநார்களில் காயம் ஏற்பட்டது.
அடப்பாவமே! இவரென்ன புல் தடுக்கி பயில்வானா?

No comments:

Post a Comment